எனக்கே நான் புரியாத புதிர்

Wednesday, July 24, 2019

நினையே நினைக்கிறேன்

நினை
நினைக்காமல் இருக்கவே
நினைக்கிறேன்.
அந்த நினைப்பையும்
மறந்தும்
நினையே நினைக்கிறேன்.
நினை
நினைக்கையில்
நிகழ்ந்தவை
நினைக்கிறேன்.
அதை நினைப்பதால்
நினை நினைப்பதை நினைக்க மறுக்கிறேன்.

நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்

விதைதனை விதைத்து பழம்தனை நோக்கி காத்திருக்கையில்;
காய் வருவதைக் கண்டு
கனியும் என நம்பி கவலை கொள்வதில்லை மனமே.

நல்விதையொன்று விதைத்து
விஷ செடி ஒன்று முளைக்க
விதி என்று சொல்ல
மதியும் விளையுதடா.

குணம் காண்

குணங்கெட்ட குதிரைமேலேற் சவாரி செய்வானேன்
குதிரை குணங்கண்டு தினம் மனம் நோவானேன்.

நட்பின் தோல்வி

அழகாய் நான் கண்ட யாவும்
அழகு துறந்தது
என்  விழியின்  குறையால் அன்று,
உன் நடையின் வழியால்.
நீ கூனிக் குறுகி நின்றது என் வெற்றி அன்று நம் நட்பின் தோல்வியே.

லிட்டில் பூச்சியல்ல

தனை செதுக்கும்
பெண்ணின் சிலைதனை
உன்னில் கண்டேன்.
சுயம் மறந்து நெருப்பில் விழும் விட்டிலாய் வீழ்ந்து விடாதே.

நட்பின் தரம்

நின் செயல்
உன் தரத்தையும்
நம் நட்பின் தரத்தையும்
காட்டுமே.
தரம் தாழ்ந்து
பின் சிரம் தாழ்த்த வேண்டாம்.

நட்பும் கற்பும்

நட்பிற்குமுண்டாம் கற்பு,
இங்கு அதில் அதை இழந்தோரே பெரும்பங்கு.

மடமை எண்ணுதல்

பிறன் மூடனென எண்ணி மடமை புரிவோர், மடமை எண்ணி வியத்தலும் வீணே.

ம*ம்

ம*ம் என்று தெரிந்து கழுவிடவே மறுத்தால் துற்மணம் வீசும் மனமே.
அதை உண்டு வாழும் உயிர்க்கு அந்த கறையொன்றும் குறையில்லை மனமே.

பெண் பித்தன் உறவு

பேய் பிடித்தவரின் உறவிலும்
பெண் பித்து பிடித்தவன் உறவே கொடிது

என் வாழ்வின் எல்லாமுமாய்

தாயாய் சேயாய் நீயாய்
தந்தையாய் சிந்தையாய் விந்தையாய்
வானாய் மண்ணாய் நானாய்
ஆணாய் பெண்ணாய் அனைத்துமாய் நீயானாய்
இணையாய் துணையாய் பிணையாய்
பணிவாய் துணிவாய் பிணியாய்
வளியாய் ஒளியாய்
எல்லாமுமாய் ஆனாய்
முருகா
என் வாழ்வின்
எல்லாமுமாய் ஆனாய்
நீ
முருகா

புதிதாய் காணச்செய்.

உனை முட்டாளாய்
நோக்கும் உலகை
உதாசீனம்  செய்து
உனை புதிதாய் காணச்செய்.

ஏனோ

உணர்வைத் கெடுத்து
உணவை கெடுத்து
உறக்கம் கெடுத்து
உடலைக் கெடுத்து
உறவையும் கெடுத்து
உயிரை எடுப்பது ஏனோ

Monday, June 12, 2017

செப்புவீரோ


வேதனையாய் இருக்கிறது
வேசியவளை காண
வேதனையாய் இருக்கிறது

சாலையோரம் நின்று
காளை யொருவன்
கடைக்கண் பார்வை
காண வேண்டி
காத்திருக்கும்

வேசியவளை காண
வேதனையாய் இருக்கிறது

காமுகனொருவன்
கட்டிய தாலி
கழுத்திருக்க
கயவனவன் தந்து சென்ற
கைக்குழந்தை வீடிருக்க
கால் வயிறு
கழுவிடவே
கடை விரித்த

வேசியவளை காண
வேதனையாய் இருக்கிறது


வேதனையாய் இருக்கிறது
வேசியவளை காண
வேதனையாய் இருக்கிறது

சாலையோரம் நின்று
காளையவன்
கடைக்கண் பார்வை
காண வேண்டி
காத்திருக்கும்

வேசியவளை காண
வேதனையாய் இருக்கிறது

கணவன்
கட்டிய தாலி
கழுத்திருக்க
குழந்தை ஒன்று  வீடிருக்க
காமம்  தலைக்கேற
கள்ள கணவனவனை

காண வேண்டி
காத்திருக்கும்

வேசியவளை  காண
வேதனையாய் இருக்கிறது

காட்சிகளிரண்டும்
கண்டுவிட்ட
கண்களிரண்டும்
கண்ணீரால் நிறைந்து விட

ஒருத்தியோ!
கயவனை நம்பிய பாவத்தால்
பெரும் தீ தனில் எரிகிறாள்

மற்றோருத்தியோ !
கணவன் நம்பும் லாபத்தால்
காமத் தீ தனில் கரைகிறாள்

இருவரில் ஒரு உயிர் வேண்டுமென
மரண தேவன் உமை வந்து கேட்க

உங்கள் விரல் காட்டும் பெண்
எவரென செப்புவீரோ ?

Tuesday, November 1, 2016

ஆணும் பெண்ணும் சமமா?

எந்த ஒரு வாசிப்பும் வாசிப்பவர் மன நிலையை பொருத்தது. இந்த தலைப்பை கண்ட சிலரோ, "இந்த கேள்வி கேட்கும் தோரணைய பாத்தா இவன் ஆணாதிக்க காரனோ"  என்று எண்ண கூடும்.
"அதெல்லாம் எங்களுக்கு தெரியும், நீ என்ன சொல்ல வர இப்ப" என்றும் எண்ணுபவர்கள் இருக்க கூடும்.

என்னைப் பொருத்த வரை பிறப்பில் இருவரும் சமம். இருப்பினும் பெண்கள் சற்றே அதிகம் மதிக்க தகுந்தவர்கள்.
காரணம் இயற்கை தரும் இடைஞ்சலும் , மறுபிறப்பு காணும் பிரசவமும்.

பொறுமை , அன்பு , அரவணைப்பு என நான் காரணம் கூறினால், அது ஆண்களிடம் இல்லை என்றாகிவிடும்.

"இதே ஆம்பளைங்க தான் பெக்கனும்னா பெக்க மாட்டோமா, இதை ஏதோ பெருசா பேசிகிட்டு"  என்று எண்ணும் அண்ணன்மார்களே, முதல் மதிப்பெண் நம்மாலும் எடுக்க முடியும். ஆனால் எடுத்தவர்களை தான் நாம் பாராட்டுவோம். அங்கணமே பெண் தன் கடமையாயினும் அதை செய்தலில் இருக்கும் சிரமங்களால் மதிக்கப்படுகிறாள்,

"அப்போ பொண்ணுங்க ஆம்பள மாறி ஜாலியா ஊர் சுத்தலாம் மற்ற எல்லாம் பண்ணலாம" என்று நினைப்பவர்கட்கு மட்டும்.
மற்ற எல்லாம் என்று சொல்வதில் நல்ல விசயங்கள் இருந்தால் செய்யலாம்.

"அப்படினா பெண்கள் எல்லாம் நல்லவங்களா, ஆம்பளைங்க எல்லாம் கெட்டவங்களா " என்று கேட்பவர்கட்கு.

பொதுப்படையாக சொல்ல வேண்டும் என்றால் இருபுறமும் நன்மையும் திமையும் நிறைந்தவர்கள் உண்டு. அதன் விகிதாசாரம் வேறுபடும்.

  உதாரணமாக துரோகம். ஒரு பெண்ணோ ஆணோ துரோகம் செய்தல் தவறுதான். ஆனால் மனைவிக்கு தெரியாமல் வேரொரு பெண்ணோடு சுற்றி திரியும் ஆணை காட்டிலும் , கணவனுக்கு தெரியாமல் வேரொரு பெண்ணோடு சுற்றி திரியும் பெண் தான் அவப்பெயருக்கு ஆளாகிறாள்.

   நல்ல பெண் பூ போன்றவள், நாற் /நூல் போன்ற நல்ல ஆண் கிடைக்க தொடுக்கப்பெற்று மலர் மாலையாகிறாள். குரங்கு போன்ற ஆண் கையில் சிக்கினால் சின்னாபின்னம் ஆகிறாள்.

  நல்ல சேர்க்கையோ தீய சேர்கையோ ஆண் எதையும் இழப்பதில்லை.

"இது ஆணாதிக்க சமுதாயம், அதான் இப்படி இருக்கு. அப்படி பெண்ண அடிமையா பாக்கிற சமுதாயம் எப்படியா உருப்புடும்" என என் இதயம் கூட சில சமயம் கேட்டதுண்டு.

பெண்கள் அடங்கி போக அவசியமும் இல்லை , கையேந்தி உரிமைக்காக நிற்கவும் தேவை இல்லை. அவள் ஒரு சுதந்திர பறவை. வேடன் விரித்த வலை அறியாது சிக்க வாய்ப்புள்ள பறவை. வேட்டையாடி பசியாற காத்திருக்கும் கழுகளுக்கு இறையாக வாய்ப்புள்ள பறவை.

ஆகவே சுதாரிப்பும் சுயகட்டுப்பாடும் கொண்டு பறக்கையிலே ஏமாற வாய்ப்பில்லை.

ஆணோ பெண்ணோ "எங்களுக்கு எல்லை தெரியும்" என்று சொல்லுபவர்கள் தாங்கள் செய்கின்ற செயலை பெற்றோரிடமோ துணையிடமோ சொல்ல முடியும் என்றால் தங்கள் எல்லை சிறப்பாய் கட்டமைக்க பட்டது என பொருள். இல்லை என்றால் செய்வது தவறு என உணர்ந்து நிறுத்திக்கொள்ளுங்கள்.

"காதலை எப்படி அப்பா அம்மா கிட்ட சொல்றது" என்று சொல்லும் வாலிப உள்ளங்களுக்கு காதலை கவனாமாய் செய்து கருத்தாய் பெற்றோர்களுக்கு புரிய செய்யுங்கள். ஜாதியின் பெயராலோ மதத்தின் பெயராலோ உண்மை காதல் இணைய தடை உண்டென்றால் தடை உடைத்து சேருங்கள். முக்கியமாக உண்மை காதலர்களுக்கு மட்டும்.

"அதென்னய்யா உண்மை காதல் பொய் காதல்" என கேட்கும் மக்களே அதன் பொருள் எமக்கும் தெரியாது. அதை உணர வேண்டியது தாங்கள்தான்.

"அது சரி எங்க காதல எப்படி என் துணைகிட்ட சொல்வது" என்று சொல்லும் நல்லவர்களே ஆள விடுங்க. அது தப்புனு சொன்னா உங்களுக்கு தப்புனே தெரியாது.

நான் ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் என சொல்லவில்லை.

ஆணும் பெண்ணும் சேர்ந்தே இவ்வுலகை படைத்திட்டனர். ஆம்  இவ்வுல ஜீவராசிகள் அனைத்தும் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் வாரிசுகளே.

இங்கு இருவரும் இணையானவரே. ஒருவரை ஒருவர் மதித்திடுவோம். இணைந்திருப்போம். இனிய உலகம் காண்போம்,