எனக்கே நான் புரியாத புதிர்

Wednesday, March 28, 2007

கானல்நிலம்

யானறியேன் இன்னாள் வரையில்
காலதேவன் கொடுமையானவன் என்று
என்வாழ்வில் கடிகார நொடிமுள்ளாய்
கட்டாற்று வேகத்தில் கடந்துசெல்கிறான்
கரைதேடும் படகாய் அந்த
கட்டாற்றின் நடுவே நானும்
கண்டுவிட்டேன் எந்தன் கரையை
இருந்தும் விழைந்ததொரு ஐயம்
காண்பது வெளியேறக் கரையோ
இல்லை மெல்லமறையும் கானல்நிலமோ?
தகிக்கும் நிலத்திலொருக் கானல்நீர்போல்
சுழலும் நீரிலொறு கானல்நிலமோ?
கரையேறக் காத்திருக்கும் படகு
கரையேறக் கைக்கொடுப்பது யாரோ?