எனக்கே நான் புரியாத புதிர்

Thursday, December 31, 2009

ந‌ன்றி கூறி அனுப்புவோம்

ஒன்றை முன் கொண்டு அத‌னில் பாதி பின் கொண்டு, த‌ன‌க்கு முன் பிற‌ந்து, பெய‌ரிலே ம‌ட்டும் குறைந்த,‌ தான் வாழ‌ப்போகும் நாளே வாழ்ந்து விட்டு போகும் த‌ன் உட‌ன் பிற‌ப்பாம் 2009 ஐ வ‌ழிய‌னுப்பும் 2010 ஐ வ‌ர‌வேற்ப‌தோடு, நாம் வ‌ந்த பாதையை எண்ணிப்பார்த்து 2009 க்கு ந‌ன்றி கூறி வழி அனுப்புவோம். ஜாதி ம‌த‌ பேத‌மின்றி, ம‌த‌ இன‌ மாறுபாடின்றி, நிற‌ குல‌ வேற்றுமையின்றி, ஆண் பெண் அனைவ‌ருமாய் அன்பை ம‌ட்டும் கையில் கொண்டு ம‌னித‌னாய் ம‌னித‌ம் வ‌ள‌ர்ந்திட‌வே ஒன்று கூடி செய‌ல் ப‌டுவோம்.

           இட‌ம் : ‍ நாட‌க‌ மேடை (உல‌க‌ம் ஒரு நாட‌க‌ மேடை அன்றோ)

           நேர‌ம் : 15:59 GMT  (31‍‍‍‍.12.2009)  ‍முத‌ல் 10.59 GMT  (01.12.2009) வ‌ரை
        
          ப‌ங்குகொள்வோர் :  ம‌க்க‌ள்


அனைவ‌ருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்.

Sunday, December 20, 2009

அவ‌தார்

விமர்ச‌னம் இல்லை‍ - வேற்றுகிர‌க‌ வாசிக‌ளுட‌ன் வாழ்ந்துவ‌ந்த‌ அனுப‌வ‌ம்



டைடானிக் இய‌க்குன‌ரின் ம‌ற்றுமொரு அற்புத‌ ப‌டைப்பு. ப‌ல‌ ஆண்டுகால‌ உழைப்பின் பிற‌ப்பு.
க‌ருவும் க‌ற்ப‌னையும் அருமையிலும் அருமை.

 விலை ம‌திப்பில்லா க‌னிம‌ தாது இருக்கும் கிர‌க‌ம், 'நாவி' எனும் வேற்றுகிர‌க‌ வாசிக‌ள் இருக்கும் அந்த‌ பாண்டோரா கிர‌க‌ம். புவியில் வாழும் சில‌ ஜீவ‌ராசிக‌ளின் சாய‌லில் ம‌னித‌ர்க‌ளும் ம‌ற்றும் ப‌ல‌ வில‌ங்குக‌ள் வாழும் ப‌சுமையான‌ கிர‌க‌ம்.

  புவியில் இருந்து சில‌ ஒளி ஆண்டுக‌ள் (ச‌ரியான தூர‌ம் க‌தைக்கு அவ‌சிய‌ம் இல்லை) தூர‌ம் இருக்கும் அந்த‌ பாண்டோராவிற்கு (இனி கிர‌க‌த்தை அத‌ன் பெய‌ராலேயே அழைப்போம்) புவியில் இருந்து ஆராய்ச்சி குழுவும், ராணுவ‌ குழுவும் க‌னிம‌ங்க‌ளை கைப‌ற்றும் நோக்குட‌ன் செல்கின்ற‌ன‌.

 ப‌ண்டோரா கிர‌க‌வாசிகளான நாவிக‌ள் 3 மீட்ட‌ருக்கும் உய‌ரமான‌ , நீல‌ நிறதேக‌மும் கொண்ட‌ ம‌னித‌ரிக‌ள் தோன்றுகிறார்க‌ள். திரையில் காணும் போது நிஜ‌ ஜீவிக‌ள் போல‌வே உள்ளார்க‌ள்.

  ந‌ம் க‌தாநாய‌க‌ன் ஜேக் க‌ப்ப‌ல் ப‌டையில் ப‌ணிபுரிந்து விப‌த்தில் த‌ன‌து இரு கால்க‌ளின் செய‌ல்பாடுக‌ளையும் இழ‌ந்த‌வ‌ன். அவ‌ன‌து இர‌ட்டை பிற‌வியான‌ அண்ண‌னின் ம‌ர‌ண‌த்தின் கார‌ண‌மாய் அண்ணன் மேற்கொள்ள‌ வேண்டிய‌ இந்த‌ அவ‌தார் ஆராய்ச்சி ப‌ணிக்கு, அண்ண‌னின் ஒத்த‌ உருவ‌ம் கொண்ட‌ ஜேக், பாண்டோரா அழைத்து வ‌ர‌ப்ப‌டுகிறான்.

  நாவிக‌ள் போல் தோற்றம் அளிக்கும் உட‌லை உருவாக்கி அத‌ற்க்கு ம‌னித‌னின் ஆன்மாவை செலுத்தி (கூடு விட்டு கூடு பாய‌ செய்வ‌து போல்) உண்மையான‌ நாவி ம‌னித‌ர்க‌ள் ம‌த்தியில் உலாவ‌ விடுத‌லே ந‌ம‌து ஆராய்ச்சியாள‌ர்க‌ளின் வேலை. அதுபோல் உருவாக்க‌ப்ப‌டும் செய‌ற்கை நாவிக‌ளே 'அவ‌தார்'.

கிரேஸ் , இந்த ஆராய்ச்சி கூட‌த்தின் த‌லைமை ஆராய்ச்சியாளர், நாவிக‌ளை ப‌ற்றி அறிந்த‌வ‌ர், அவர்க‌ளை ப‌ற்றி நூல் எழுதிய‌வ‌ர். நாவிக‌ளுட‌ன் க‌ல‌ந்த‌ அனுப‌வ‌ம் உள்ள‌வ‌ர். இவ‌ர‌து த‌லைமையில் ஜேக் ம‌ற்றும் அவ‌ர‌து ந‌ண்ப‌ர் , மூவ‌ரும் ஒரு பெட்டியினுள் த‌ஞ்ச‌ம் கொண்டு சுய‌ நினைவு அக‌ல‌, வேறொரு இட‌த்தில் இருக்கும் நாவிக‌ளின் செய‌ற்கை உட‌லுக்குள் 'அவ‌தார்' ஆக‌ உருவெடுக்கிறார்க‌ள்.

அவ‌தார் ஆக‌ உருவெடுத்த‌ க‌தாநாய‌க‌ன் தன் கால்க‌ள் செய‌ல் ப‌டுவ‌தால் ஏற்ப‌டும் பேரான‌ந்த‌த்தை அவ‌ன‌து ஓட்ட‌ம் எடுக்கும் காட்சியில் அற்புத‌மாய் ப‌ட‌மாக்கி இருக்கிறார்க‌ள்.

பின் கிரேஸ், ஜேக் ம‌ற்றும் அவ‌ன‌து ந‌ண்ப‌ன் மூவ‌ரும் நாவிக‌ள் இருப்பிட‌ம் நோக்கி வ‌ருகிறார்க‌ள்.
அங்கு மிருக‌மொன்று விர‌ட்ட‌ க‌தாநாய‌க‌ன் க‌தைக்குள் வ‌ருகிறான்.

இங்கு அந்த‌ காட்டின் காட்சியாக்க‌ம் , வ‌ந்து மிர‌ட்டும் குர‌ங்கு, காண்டா மிருக‌ம் , ஓநாய் , ஓணான் போன்ற பூமியில் இருக்கும் வில‌ங்குக‌ளை ஒத்த‌ வில‌ங்குக‌ளின் தோற்ற‌ம் அருமை.

அவ்வாரு காட்டிற்குள் த‌னியே சிக்கும் க‌தாநாய‌க‌னை ஓநாய்க‌ளிட‌ம் இருந்து காப்பாற்றி ந‌ம‌து  க‌தா நாய‌கி(நாவி பெண்) காட்சி த‌ருகிறாள். நாய‌க‌னை த‌ன‌து குழுவிற்கு அழைத்து செல்லும் நாய‌கியே அவ‌னுக்கு நாவி ம‌க்க‌ளின் வாழ்கை முறையையும் பழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளையும் க‌ற்பிக்கும் பொறுப்பிற்கு ஆளாகிறாள்.

 அவ்வாறே நாய‌க‌னும் ந‌ன்கு க‌ற்று நாவி ம‌க்க‌ளின் ந‌ம்பிக்கைக்கும் நாய‌கியின் காத‌லுக்கும் உரிய‌வ‌னாகிறான். நாய‌க‌ன் பாதி நேர‌ம் ம‌னித‌னாய் ஆராய்ச்சி கூட‌த்திலும் மீதி நேர‌ம் அவ‌தாராய் நாவிக‌ளுட‌னும் இருக்கிறான். நாவிக‌ள் இய‌ற்கையை வ‌ண‌ங்குவ‌தும் , பிற‌ உயிர்க‌ளை ம‌திப்ப‌து நாய‌க‌னை க‌வர்கிற‌து.

நாவிக‌ளின் இருப்பிட‌மோ ஒரு மிக‌ப்பெரிய ம‌ர‌த்தின் மீது, ம‌னித‌ர்க‌ள் தேடும் க‌னிம‌மோ அம்ம‌ர‌த்திற்க‌டியில். நாவிகளை அவ்விருப்பிட‌ம் இருந்து அக‌ற்றுவ‌தே ஆராய்ச்சியாளர்க‌ளின் நோக்க‌ம். அதற்கு க‌தாநாய‌க‌னுக்கு கொடுக‌ப்ப‌ட்ட‌ கால்ம் மூன்று மாத‌ம். இயலாத‌ ப‌ட்ச‌த்தில் அவ‌ர்க‌ளை அழிப்ப‌தே இவ‌ர்க‌ளின் நோக்க‌ம்.

  நாவிக‌ள் செய‌ற்பாடுக‌ள் மீது ஈடுபாடு கொண்ட‌ நாய‌க‌னோ மூன்று மாத‌ கால‌த்திற்கு பின் அவ‌ர்க‌ளை அக‌ற்றுவ‌து கூடாது என‌ உண‌ர்கிறான். இதைய‌றிந்த‌ ராணுவ‌ வீர‌ர்க‌ள் அவ‌ன‌து உட‌லை த‌ட்டி எழுப்பி அவ‌ன‌து அவ‌தாரை செய‌லிழ‌க்க‌ செய்து மூவ‌ரையும் சிறை பிடிக்கிறார்க‌ள்.பின் பெரும் ஆயுத‌ம் கொண்டு நாவிக‌ளின் இருப்பிட‌மான‌ ம‌ர‌த்தை அழிக்கிறார்க‌ள்.

பின் அவ‌ர்க‌ள் மூவ‌ரும் எப்ப‌டி நாவிக‌ளை அடைகிறார்க‌ள், அவ‌ர்க‌ளுக்கு உத‌வுகிறார்க‌ள் என்ற‌ ஆர்வ‌த்தை அதிக‌ரித்து ந‌மை இருக்கையின் நுணிக்கே கொண்டு வ‌ருகிறார் ந‌ம‌து இய‌க்குன‌ர்.

அருமையான‌ ச‌ண்டை காட்சிக‌ள், நிஜ‌மென‌ ந‌ம்பும் அள‌வு கிராபிக்ஸ் காட்சிக‌ள், மித‌க்கும் ம‌லைக‌ள், அதிர‌ வைக்கும் ப‌ற‌வைக‌ளும் அதில் ச‌வாரியும் அப்ப‌ப்பா பிர‌மாண்ட‌ம்.

முப்ப‌ரிமாண் திரையில் காண்ப‌தினால் நீங்க‌ள் பாண்டோரா சென்று நேரில் காணும் ஒரு உண‌ர்வு ஏற்ப‌டுவ‌து உறுதி.

மொத்த‌த்தில் அருமையான ப‌ட‌ம், அனைவரும் பார்க்க‌ வேண்டிய‌, பார்க்க‌ கூடிய‌ ப‌ட‌ம்.

 உருவாக்கிய‌ அனைவ‌ருக்கும் ஒரு ச‌லாம், இய‌க்குன‌ருக்கு ஒரு த‌னி ச‌லாம்,

Saturday, December 19, 2009

தேடிக்கொண்டு இருக்கிறேன்

தேடிக்கொண்டு இருக்கிறேன் ... 
எனது  தேவையையும் 
அதன் தேவைகளையும்

க‌லியுற‌வு

இருகை இணைந்தேயிருந்தாலும்,
நம்பிக்கைக் கொள்ளுமளவு இல்லயே 
இக்கலியின் உறவில்

படைத்ததாய் படைத்தோம்


பழி போடவே படைத்தோம் 
கடவுளை நமை படைத்ததாய்

ம‌ருந்து வாழ்க்கை

கசப்பாய் உண்டாய் மருந்தை
நீ குணம் பெற - அதுபோல்
கசப்பாய் இருக்கும் வாழ்கை
உன் மனம் திடம் பெற

க‌(ல்)டவுள்


இல்லை என்பது எளிது -
இல்லாமல் ஆக்குவது அதனினும் எளிது -
தொல்லை என்று வந்தால் -
கல்லை நோக்கி ஒடுவோம் நாங்கள் 

உணர்வதுவே உணர்வு,
புரிவதுவே உறவு
இரண்டும் கொண்டோம் அவனிடம்

 

காத்திருக்கிறேன்

கண்ணே
நேரில் காணும் வரை
காத்திருக்கச் சொன்னாய்,
காதலை நீ சொல்லும் வரை
சாத்தியமாய் இருந்ததடி.
சொன்ன நொடி முதலாய்
சொர்கமும் நரகமானதேன்,
சாவது போல் உணர்கிறேன்
சத்தியமாய் உண்மையடி.

ஏய் பெண்ணே!


ஏய் பெண்ணே!
பிரம்மன் தீட்டிய கவிதை நீ என எண்ணி
உனை கூடும் நாள் நோக்கி தவமிருந்தேன்
கவிதை எழுதும் என் பணி தனையும் நான் மறந்தேன்

நான் படும் துன்பம் கூறுவது நீ இரங்க அன்று
நாளை நான் கூட எண்ணுகின்ற வேளையில்
நீ என் உட்லோடு மனம் கூடி இன்பம் தந்து பெறவே

உன் கையாலே உண்டு
உன் மடியிலே உறங்கி
உன் பூவிதழ் சுவைத்து
உன் மார்போடு ஒன்றி
வாழ்கின்ற வாழ்வே வாழ்வு

காமத்திலே நான் மிதப்பது
என் காதலின் ஒரு சிறு பகுதியென்றால்
என் காதலின் அளவை கண்டோயோ பெண்கிளியே
நீ காண்பதுவென் காமத்தின் சாரமன்று
என் காதலுன் மீது பாயும் ஆழம்


Saturday, September 12, 2009

காதல் போதை



பெண்ணுக்குள் போதை வைத்தான் -அவள்
கண்ணுக்குள் காதல் வைத்தான்
எனை அவள் காணும் போது நெஞ்சுக்குள்
பூகம்பம் தானே - அதுவும்
இதமான வேதனை தானே

அவள் கண்கள் கண்ட போது துக்கம் இல்லை
அவள் என்னை கண்ட முதலாய் தூக்கம் இல்லை

நான் காதல் எனும் தேர்வில் தேறிவிட்டேன்
ஒரு கானம் பாடும் கவியாய் மாறிவிட்டேன்