எனக்கே நான் புரியாத புதிர்

Monday, June 12, 2017

செப்புவீரோ


வேதனையாய் இருக்கிறது
வேசியவளை காண
வேதனையாய் இருக்கிறது

சாலையோரம் நின்று
காளை யொருவன்
கடைக்கண் பார்வை
காண வேண்டி
காத்திருக்கும்

வேசியவளை காண
வேதனையாய் இருக்கிறது

காமுகனொருவன்
கட்டிய தாலி
கழுத்திருக்க
கயவனவன் தந்து சென்ற
கைக்குழந்தை வீடிருக்க
கால் வயிறு
கழுவிடவே
கடை விரித்த

வேசியவளை காண
வேதனையாய் இருக்கிறது


வேதனையாய் இருக்கிறது
வேசியவளை காண
வேதனையாய் இருக்கிறது

சாலையோரம் நின்று
காளையவன்
கடைக்கண் பார்வை
காண வேண்டி
காத்திருக்கும்

வேசியவளை காண
வேதனையாய் இருக்கிறது

கணவன்
கட்டிய தாலி
கழுத்திருக்க
குழந்தை ஒன்று  வீடிருக்க
காமம்  தலைக்கேற
கள்ள கணவனவனை

காண வேண்டி
காத்திருக்கும்

வேசியவளை  காண
வேதனையாய் இருக்கிறது

காட்சிகளிரண்டும்
கண்டுவிட்ட
கண்களிரண்டும்
கண்ணீரால் நிறைந்து விட

ஒருத்தியோ!
கயவனை நம்பிய பாவத்தால்
பெரும் தீ தனில் எரிகிறாள்

மற்றோருத்தியோ !
கணவன் நம்பும் லாபத்தால்
காமத் தீ தனில் கரைகிறாள்

இருவரில் ஒரு உயிர் வேண்டுமென
மரண தேவன் உமை வந்து கேட்க

உங்கள் விரல் காட்டும் பெண்
எவரென செப்புவீரோ ?