எனக்கே நான் புரியாத புதிர்

Friday, January 5, 2007

நிதர்சனக்காதல்

காதல் சொல்ல எண்ணிக் கவிதைகள் தீட்டினேன்
கற்பனைப் பொங்கச் சொல்லி மூளையை கசக்கினேன்
காற்றோட்டம் போல் கவிதைப் பொங்கியோடுமென
கனவிலே உறைந்து போய் நானும் காத்துகிடந்தேன்
கண்ணிமைக்கும் நேரத்திலே அவன் பலகலைகள் செய்து
கண்ணெதிரே நிகழ்தினன் அவள் இதய திருட்டை
கவிதையும் பிறந்தது அந்த காதல் கண்டு
கவனமாய் இம்முறை அவள் தங்கையிடம் தந்துவிட்டேன்
காதல் சொல்லும் அந்தக் கடிதக் கவிதையை
கண்ணியமானோரேக் கூறுங்கள் இந்தக் காதல் இளவரசனுக்கு
காவியம் படைக்கும் இந்தக் காதல்தானே நிதர்சனக்காதல்

No comments: