எனக்கே நான் புரியாத புதிர்

Friday, October 28, 2016

நானும் சொல்றேன்

நாட்டில்
நடக்கும்
நடப்புகள் காண
நடுக்கமும்
நம்முள்
நாட்டியமாடுது

மத வாதம்
இன வாதம்
தீவிர வாதம் என
வாதம் வந்த உலகிலே
வாழும் நாம்
கலியின்
கிலியில்

எத்துணை கொலைகள்
எத்துணை கள்ளம்
எத்துணை வன்கொடுமை
எத்துணை பெண்கொடுமை
அத்துணையும் ஒழியட்டும்
நரகாசுரன் அழிந்த நாள் முதலாய்

தீப ஒளியில்
தீமைகள் மறையட்டும்

அன்பும்
அமைதியும்
அரவணைப்பும்
அனைவரது இதயத்தில் பூக்கட்டும்

இனிப்புகள் உண்டு
இன்முகம் கொண்டு
இனிதே ஆடுவோம்
கொண்டாடுவோம்


தீபாவளி நல்வாழ்த்துகள்