நாட்டில்
நடக்கும்
நடப்புகள் காண
நடுக்கமும்
நம்முள்
நாட்டியமாடுது
மத வாதம்
இன வாதம்
தீவிர வாதம் என
வாதம் வந்த உலகிலே
வாழும் நாம்
கலியின்
கிலியில்
எத்துணை கொலைகள்
எத்துணை கள்ளம்
எத்துணை வன்கொடுமை
எத்துணை பெண்கொடுமை
அத்துணையும் ஒழியட்டும்
நரகாசுரன் அழிந்த நாள் முதலாய்
தீப ஒளியில்
தீமைகள் மறையட்டும்
அன்பும்
அமைதியும்
அரவணைப்பும்
அனைவரது இதயத்தில் பூக்கட்டும்
இனிப்புகள் உண்டு
இன்முகம் கொண்டு
இனிதே ஆடுவோம்
கொண்டாடுவோம்
தீபாவளி
நல்வாழ்த்துகள்
1 comment:
hope your good wishes happen soon
Post a Comment