விமர்சனம் இல்லை - வேற்றுகிரக வாசிகளுடன் வாழ்ந்துவந்த அனுபவம்
டைடானிக் இயக்குனரின் மற்றுமொரு அற்புத படைப்பு. பல ஆண்டுகால உழைப்பின் பிறப்பு.
கருவும் கற்பனையும் அருமையிலும் அருமை.
விலை மதிப்பில்லா கனிம தாது இருக்கும் கிரகம், 'நாவி' எனும் வேற்றுகிரக வாசிகள் இருக்கும் அந்த பாண்டோரா கிரகம். புவியில் வாழும் சில ஜீவராசிகளின் சாயலில் மனிதர்களும் மற்றும் பல விலங்குகள் வாழும் பசுமையான கிரகம்.
புவியில் இருந்து சில ஒளி ஆண்டுகள் (சரியான தூரம் கதைக்கு அவசியம் இல்லை) தூரம் இருக்கும் அந்த பாண்டோராவிற்கு (இனி கிரகத்தை அதன் பெயராலேயே அழைப்போம்) புவியில் இருந்து ஆராய்ச்சி குழுவும், ராணுவ குழுவும் கனிமங்களை கைபற்றும் நோக்குடன் செல்கின்றன.
பண்டோரா கிரகவாசிகளான நாவிகள் 3 மீட்டருக்கும் உயரமான , நீல நிறதேகமும் கொண்ட மனிதரிகள் தோன்றுகிறார்கள். திரையில் காணும் போது நிஜ ஜீவிகள் போலவே உள்ளார்கள்.
நம் கதாநாயகன் ஜேக் கப்பல் படையில் பணிபுரிந்து விபத்தில் தனது இரு கால்களின் செயல்பாடுகளையும் இழந்தவன். அவனது இரட்டை பிறவியான அண்ணனின் மரணத்தின் காரணமாய் அண்ணன் மேற்கொள்ள வேண்டிய இந்த அவதார் ஆராய்ச்சி பணிக்கு, அண்ணனின் ஒத்த உருவம் கொண்ட ஜேக், பாண்டோரா அழைத்து வரப்படுகிறான்.
நாவிகள் போல் தோற்றம் அளிக்கும் உடலை உருவாக்கி அதற்க்கு மனிதனின் ஆன்மாவை செலுத்தி (கூடு விட்டு கூடு பாய செய்வது போல்) உண்மையான நாவி மனிதர்கள் மத்தியில் உலாவ விடுதலே நமது ஆராய்ச்சியாளர்களின் வேலை. அதுபோல் உருவாக்கப்படும் செயற்கை நாவிகளே 'அவதார்'.
கிரேஸ் , இந்த ஆராய்ச்சி கூடத்தின் தலைமை ஆராய்ச்சியாளர், நாவிகளை பற்றி அறிந்தவர், அவர்களை பற்றி நூல் எழுதியவர். நாவிகளுடன் கலந்த அனுபவம் உள்ளவர். இவரது தலைமையில் ஜேக் மற்றும் அவரது நண்பர் , மூவரும் ஒரு பெட்டியினுள் தஞ்சம் கொண்டு சுய நினைவு அகல, வேறொரு இடத்தில் இருக்கும் நாவிகளின் செயற்கை உடலுக்குள் 'அவதார்' ஆக உருவெடுக்கிறார்கள்.
அவதார் ஆக உருவெடுத்த கதாநாயகன் தன் கால்கள் செயல் படுவதால் ஏற்படும் பேரானந்தத்தை அவனது ஓட்டம் எடுக்கும் காட்சியில் அற்புதமாய் படமாக்கி இருக்கிறார்கள்.
பின் கிரேஸ், ஜேக் மற்றும் அவனது நண்பன் மூவரும் நாவிகள் இருப்பிடம் நோக்கி வருகிறார்கள்.
அங்கு மிருகமொன்று விரட்ட கதாநாயகன் கதைக்குள் வருகிறான்.
இங்கு அந்த காட்டின் காட்சியாக்கம் , வந்து மிரட்டும் குரங்கு, காண்டா மிருகம் , ஓநாய் , ஓணான் போன்ற பூமியில் இருக்கும் விலங்குகளை ஒத்த விலங்குகளின் தோற்றம் அருமை.
அவ்வாரு காட்டிற்குள் தனியே சிக்கும் கதாநாயகனை ஓநாய்களிடம் இருந்து காப்பாற்றி நமது கதா நாயகி(நாவி பெண்) காட்சி தருகிறாள். நாயகனை தனது குழுவிற்கு அழைத்து செல்லும் நாயகியே அவனுக்கு நாவி மக்களின் வாழ்கை முறையையும் பழக்க வழக்கங்களையும் கற்பிக்கும் பொறுப்பிற்கு ஆளாகிறாள்.
அவ்வாறே நாயகனும் நன்கு கற்று நாவி மக்களின் நம்பிக்கைக்கும் நாயகியின் காதலுக்கும் உரியவனாகிறான். நாயகன் பாதி நேரம் மனிதனாய் ஆராய்ச்சி கூடத்திலும் மீதி நேரம் அவதாராய் நாவிகளுடனும் இருக்கிறான். நாவிகள் இயற்கையை வணங்குவதும் , பிற உயிர்களை மதிப்பது நாயகனை கவர்கிறது.
நாவிகளின் இருப்பிடமோ ஒரு மிகப்பெரிய மரத்தின் மீது, மனிதர்கள் தேடும் கனிமமோ அம்மரத்திற்கடியில். நாவிகளை அவ்விருப்பிடம் இருந்து அகற்றுவதே ஆராய்ச்சியாளர்களின் நோக்கம். அதற்கு கதாநாயகனுக்கு கொடுகப்பட்ட கால்ம் மூன்று மாதம். இயலாத பட்சத்தில் அவர்களை அழிப்பதே இவர்களின் நோக்கம்.
நாவிகள் செயற்பாடுகள் மீது ஈடுபாடு கொண்ட நாயகனோ மூன்று மாத காலத்திற்கு பின் அவர்களை அகற்றுவது கூடாது என உணர்கிறான். இதையறிந்த ராணுவ வீரர்கள் அவனது உடலை தட்டி எழுப்பி அவனது அவதாரை செயலிழக்க செய்து மூவரையும் சிறை பிடிக்கிறார்கள்.பின் பெரும் ஆயுதம் கொண்டு நாவிகளின் இருப்பிடமான மரத்தை அழிக்கிறார்கள்.
பின் அவர்கள் மூவரும் எப்படி நாவிகளை அடைகிறார்கள், அவர்களுக்கு உதவுகிறார்கள் என்ற ஆர்வத்தை அதிகரித்து நமை இருக்கையின் நுணிக்கே கொண்டு வருகிறார் நமது இயக்குனர்.
அருமையான சண்டை காட்சிகள், நிஜமென நம்பும் அளவு கிராபிக்ஸ் காட்சிகள், மிதக்கும் மலைகள், அதிர வைக்கும் பறவைகளும் அதில் சவாரியும் அப்பப்பா பிரமாண்டம்.
முப்பரிமாண் திரையில் காண்பதினால் நீங்கள் பாண்டோரா சென்று நேரில் காணும் ஒரு உணர்வு ஏற்படுவது உறுதி.
மொத்தத்தில் அருமையான படம், அனைவரும் பார்க்க வேண்டிய, பார்க்க கூடிய படம்.
உருவாக்கிய அனைவருக்கும் ஒரு சலாம், இயக்குனருக்கு ஒரு தனி சலாம்,
டைடானிக் இயக்குனரின் மற்றுமொரு அற்புத படைப்பு. பல ஆண்டுகால உழைப்பின் பிறப்பு.
கருவும் கற்பனையும் அருமையிலும் அருமை.
விலை மதிப்பில்லா கனிம தாது இருக்கும் கிரகம், 'நாவி' எனும் வேற்றுகிரக வாசிகள் இருக்கும் அந்த பாண்டோரா கிரகம். புவியில் வாழும் சில ஜீவராசிகளின் சாயலில் மனிதர்களும் மற்றும் பல விலங்குகள் வாழும் பசுமையான கிரகம்.
புவியில் இருந்து சில ஒளி ஆண்டுகள் (சரியான தூரம் கதைக்கு அவசியம் இல்லை) தூரம் இருக்கும் அந்த பாண்டோராவிற்கு (இனி கிரகத்தை அதன் பெயராலேயே அழைப்போம்) புவியில் இருந்து ஆராய்ச்சி குழுவும், ராணுவ குழுவும் கனிமங்களை கைபற்றும் நோக்குடன் செல்கின்றன.
பண்டோரா கிரகவாசிகளான நாவிகள் 3 மீட்டருக்கும் உயரமான , நீல நிறதேகமும் கொண்ட மனிதரிகள் தோன்றுகிறார்கள். திரையில் காணும் போது நிஜ ஜீவிகள் போலவே உள்ளார்கள்.
நம் கதாநாயகன் ஜேக் கப்பல் படையில் பணிபுரிந்து விபத்தில் தனது இரு கால்களின் செயல்பாடுகளையும் இழந்தவன். அவனது இரட்டை பிறவியான அண்ணனின் மரணத்தின் காரணமாய் அண்ணன் மேற்கொள்ள வேண்டிய இந்த அவதார் ஆராய்ச்சி பணிக்கு, அண்ணனின் ஒத்த உருவம் கொண்ட ஜேக், பாண்டோரா அழைத்து வரப்படுகிறான்.
நாவிகள் போல் தோற்றம் அளிக்கும் உடலை உருவாக்கி அதற்க்கு மனிதனின் ஆன்மாவை செலுத்தி (கூடு விட்டு கூடு பாய செய்வது போல்) உண்மையான நாவி மனிதர்கள் மத்தியில் உலாவ விடுதலே நமது ஆராய்ச்சியாளர்களின் வேலை. அதுபோல் உருவாக்கப்படும் செயற்கை நாவிகளே 'அவதார்'.
கிரேஸ் , இந்த ஆராய்ச்சி கூடத்தின் தலைமை ஆராய்ச்சியாளர், நாவிகளை பற்றி அறிந்தவர், அவர்களை பற்றி நூல் எழுதியவர். நாவிகளுடன் கலந்த அனுபவம் உள்ளவர். இவரது தலைமையில் ஜேக் மற்றும் அவரது நண்பர் , மூவரும் ஒரு பெட்டியினுள் தஞ்சம் கொண்டு சுய நினைவு அகல, வேறொரு இடத்தில் இருக்கும் நாவிகளின் செயற்கை உடலுக்குள் 'அவதார்' ஆக உருவெடுக்கிறார்கள்.
அவதார் ஆக உருவெடுத்த கதாநாயகன் தன் கால்கள் செயல் படுவதால் ஏற்படும் பேரானந்தத்தை அவனது ஓட்டம் எடுக்கும் காட்சியில் அற்புதமாய் படமாக்கி இருக்கிறார்கள்.
பின் கிரேஸ், ஜேக் மற்றும் அவனது நண்பன் மூவரும் நாவிகள் இருப்பிடம் நோக்கி வருகிறார்கள்.
அங்கு மிருகமொன்று விரட்ட கதாநாயகன் கதைக்குள் வருகிறான்.
இங்கு அந்த காட்டின் காட்சியாக்கம் , வந்து மிரட்டும் குரங்கு, காண்டா மிருகம் , ஓநாய் , ஓணான் போன்ற பூமியில் இருக்கும் விலங்குகளை ஒத்த விலங்குகளின் தோற்றம் அருமை.
அவ்வாரு காட்டிற்குள் தனியே சிக்கும் கதாநாயகனை ஓநாய்களிடம் இருந்து காப்பாற்றி நமது கதா நாயகி(நாவி பெண்) காட்சி தருகிறாள். நாயகனை தனது குழுவிற்கு அழைத்து செல்லும் நாயகியே அவனுக்கு நாவி மக்களின் வாழ்கை முறையையும் பழக்க வழக்கங்களையும் கற்பிக்கும் பொறுப்பிற்கு ஆளாகிறாள்.
அவ்வாறே நாயகனும் நன்கு கற்று நாவி மக்களின் நம்பிக்கைக்கும் நாயகியின் காதலுக்கும் உரியவனாகிறான். நாயகன் பாதி நேரம் மனிதனாய் ஆராய்ச்சி கூடத்திலும் மீதி நேரம் அவதாராய் நாவிகளுடனும் இருக்கிறான். நாவிகள் இயற்கையை வணங்குவதும் , பிற உயிர்களை மதிப்பது நாயகனை கவர்கிறது.
நாவிகளின் இருப்பிடமோ ஒரு மிகப்பெரிய மரத்தின் மீது, மனிதர்கள் தேடும் கனிமமோ அம்மரத்திற்கடியில். நாவிகளை அவ்விருப்பிடம் இருந்து அகற்றுவதே ஆராய்ச்சியாளர்களின் நோக்கம். அதற்கு கதாநாயகனுக்கு கொடுகப்பட்ட கால்ம் மூன்று மாதம். இயலாத பட்சத்தில் அவர்களை அழிப்பதே இவர்களின் நோக்கம்.
நாவிகள் செயற்பாடுகள் மீது ஈடுபாடு கொண்ட நாயகனோ மூன்று மாத காலத்திற்கு பின் அவர்களை அகற்றுவது கூடாது என உணர்கிறான். இதையறிந்த ராணுவ வீரர்கள் அவனது உடலை தட்டி எழுப்பி அவனது அவதாரை செயலிழக்க செய்து மூவரையும் சிறை பிடிக்கிறார்கள்.பின் பெரும் ஆயுதம் கொண்டு நாவிகளின் இருப்பிடமான மரத்தை அழிக்கிறார்கள்.
பின் அவர்கள் மூவரும் எப்படி நாவிகளை அடைகிறார்கள், அவர்களுக்கு உதவுகிறார்கள் என்ற ஆர்வத்தை அதிகரித்து நமை இருக்கையின் நுணிக்கே கொண்டு வருகிறார் நமது இயக்குனர்.
அருமையான சண்டை காட்சிகள், நிஜமென நம்பும் அளவு கிராபிக்ஸ் காட்சிகள், மிதக்கும் மலைகள், அதிர வைக்கும் பறவைகளும் அதில் சவாரியும் அப்பப்பா பிரமாண்டம்.
முப்பரிமாண் திரையில் காண்பதினால் நீங்கள் பாண்டோரா சென்று நேரில் காணும் ஒரு உணர்வு ஏற்படுவது உறுதி.
மொத்தத்தில் அருமையான படம், அனைவரும் பார்க்க வேண்டிய, பார்க்க கூடிய படம்.
உருவாக்கிய அனைவருக்கும் ஒரு சலாம், இயக்குனருக்கு ஒரு தனி சலாம்,
No comments:
Post a Comment